அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக்கழகத்தின் 79 வது ஆடி விழா!

தமிழர் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாகப் பேணிவரும் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை அராலி தெற்கு, களவத்துறை விளையாட்டுக்கழகம் நடத்திய 79-வது ஆடி விழா விளையாட்டு நிகழ்வில் (19.07.2026) முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அராலி தெற்கு வட்டார கௌரவ பிரதேச சபை உறுப்பினர் சண்முகலிங்கம் சபேசன், ஓய்வுநிலை அதிபர் சிவஞானபோதன், விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்