தொடர் போராட்டத்தை நடாத்தி வரும் கேப்பாப்புலவு மக்களை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் கடந்த சனிக்கிழமை(18) 26வது நாளாகவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த 26 ஆம் நாள் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் அவர்களும் இன்றைய தினம் பங்கேற்றார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் பங்கேற்றிருந்தார்.

சிறப்புச் செய்திகள்