கரைச்சிப் பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் புதிய ஆயுர்வேத மருந்தகம் திறப்பு!

“ஈழத் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் என்பது வெறும் நோய் தீர்க்கும் கலை மட்டுமல்ல; அது எமது மண்ணோடும், மரபோடும், இயற்கை வளங்களோடும் பிணைக்கப்பட்ட எமது தனித்துவ அடையாளத்தின் பிரிக்க முடியாத ஒரு குறியீடாகும்” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார். ”மருத்துவத்துறையில் நாம் அடையும் இத்தகைய சுயாட்சியானது, எமது ஒட்டுமொத்த அரசியல் விடுதலைக்கான பயணத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக அமையும். அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் […]
சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு சிறீதரன் எம்.பி விஜயம்!

யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, வைத்தியசாலையின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், நோயாளர் விடுதி உள்ளிட்ட வைத்தியசாலையின் வெளி வளாகப் பிரதேசங்களையும் அவர் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சங்கானை பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவது தொடர்பாக தன்னாலான முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என […]