அடக்குமுறைகளும் நில அபகரிப்பும் தொடர்கிறது: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி

இன்றைய தினம் அரசு தொடர்பான விவாதங்களிலும், மத்திய வங்கி தொடர்பான விவாதங்களிலும் மிக முக்கியமாக இந்த நாட்டிலே இந்த அரசு (NPP) பொறுப்பேற்ற பிற்பாடும் பலவிதமான நெருக்குதல்களையும், நெருக்கடிகளையும் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும், தமிழ் உத்தியோகத்தர்களும் சந்திக்கிறார்கள் என்பதையும் தமிழ்மக்கள் சந்திக்கிறார்கள் என்பதையும் நான் இந்த இடத்திலே பதிவு செய்ய விரும்புகிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(07) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். […]
தீக்கதிர் அவர்களின் தந்தையாரது பூதவுடலுக்கு சிறீதரன் எம்.பி அஞ்சலி!

ஈழ விடுதலைப் போரியல் வரலாற்றின் இரண்டாவது கடற்கரும்புலி தீக்கதிர் அவர்களின் தந்தையாரது பூதவுடலுக்கு, கட்டைக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். இதன்போது, அருட்தந்தை வசந்தன் அடிகளார் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் கௌரவ உறுப்பினர் கௌரவ வீரபாகுதேவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யாழ். பல்கலையின் துணைவேந்தராகப் பதவியேற்றுள்ள பேராசிரியர் வேல்நம்பி அவர்களின் பாராட்டு நிகழ்வில் சிறீதரன் எம்.பி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராகப் பதவியேற்றுள்ள சிரேஷ்ட இருக்கைப் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்களுக்கு, புதுவை மண்ணில் மேற்கொள்ளப்பட்ட பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள்.
சமகால அரசியல் நிலைமை தொடர்பான கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிருவாகக் கூட்டமும், சமகால அரசியல் கலந்தாய்வும் நேற்று முன்தினம்(04) கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது. அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து, சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் ஏனைய பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும், கௌரவ நாடாளுமன்ற […]
கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் சாதனையாளர் மதிப்பளிப்பு விழா!

“மாணவர்களே! எப்போதும் உங்கள் வாழ்விற்கென உயரிய இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி உறுதியுடன் நகருங்கள். உங்களை நீங்கள் முழுமையாக நம்புங்கள். ஒரு மனிதன் தன்னையும் தன் திறமையையும் நம்பத் தொடங்கிவிட்டால், எத்தகைய சக்தியாலும் அவனையும், அவன் சார்ந்த மண்ணையும் அசைத்துப் பார்க்க முடியாது,” என கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற, உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் முதலிடம் பெற்ற சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே […]
முக்கொம்பன் மண்ணுக்குப் பெருமை சேர்த்த இசைப்பிரியா: நேரில் சென்று வாழ்த்திய சிறீதரன் எம்.பி….!

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்த, மாணவி விஜயரூபன் இசைப்பிரியா அவர்களுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதன்போது கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய அதிபர் திரு.இராசரத்தினம் அரவிந்தன் அவர்களும், பூநகரிப் பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர்( நல்லூர் வட்டாரம்) திருமதி குலவீரசிங்கம் […]
பச்சிலைப்பள்ளியில் காணி சுவீகரிப்புக்கு எதிராகப் பாரிய போராட்டம்: நில அளவை நடவடிக்கை கைவிடப்பட்டது!

கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊர்வணிக்கன்பற்று கிராமத்தில், இராணுவத் தேவைக்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று (02) காலை பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மக்களின் பலத்த எதிர்ப்பினைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்டிருந்த நில அளவை நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 4 ஆவது பட்டாலியன் படைப்பிரிவின், மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி அமைப்பதற்காக 25.73 ஏக்கர் தனியார் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்குடன் இந்த நில அளவை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசாங்க […]
சந்தனம் சண்முகராசாவின் (வாசு மாஸ்டர்) இறுதி சடங்கில் சிறீதரன் எம்.பி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப்டினன்ட் சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி) அவர்களின் மைத்துனரும், தமிழீழத் தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்டவருமான சந்தனம் சண்முகராசா (வாசு மாஸ்டர்) அவர்களின் இறுதிச்சடங்கு திருகோணமலை, ஆத்திமோட்டையில் நேற்றையதினம்(31) நடைபெற்றது. இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சிறீதரன் எம்.பியின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு ஒலியமைப்புச் சாதனங்கள் கையளிப்பு!

யாழ்ப்பாணம், கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்திற்கான ஒலியமைப்புச் சாதனங்கள் வழங்கும் நிகழ்வு அண்மைய தினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. கனடா, மொன்றியல் வாழ் தமிழ் தேசியத்திற்கான வேர்கள் அமையத்தின் நிதி அனுசரணையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் குறித்த ஒலியமைப்புச் சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் […]
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மூடப்பட்ட புகையிரதக் கடவைகளைத் திறக்க நடவடிக்கை!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று( 27) யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகளையும் சபைக்கு வழங்கியிருந்தார். குறிப்பாக, “யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரவுண் வீதி முதலாம் ஒழுங்கை – அன்னசத்திர முதலாம் ஒழுங்கைப் பகுதியில் மூடப்பட்டுள்ள […]
Meeting with UN Resident Coordinator: MP Shritharan discusses governance gap in the North

ITAK Member of Parliament Sivagnanam Shritharan met with the United Nations Resident Coordinator, Marc-André Franche, on Tuesday (24/03/2026) at the UN office (IOM) in Jaffna. During the meeting, extensive discussions were held on the current political and socio-economic situation in the Northern Province. The UN Resident Coordinator was briefed on the significant governance gap caused […]
யாழ்ப்பாணத்தில் 300 ஆண்டுகால வீதி திடீர் மூடல்: களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த புகையிரதக் கடவை வீதி ஒன்று திடீரென மூடப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ். நகரின் பிரவுண் வீதி இரண்டாம் ஒழுங்கையையும் அன்னசத்திர வீதியையும் இணைக்கும் இந்தப் போக்குவரத்துப் பாதையே கடந்த 16-ஆம் திகதி முதல் புகையிரதத் திணைக்களத்தினால் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளாகத் தாங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் […]