“தென்னந்தோப்புகளை அழித்து காற்றாலைகளா?” நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய தினம் வலுசக்தி மற்றும் மின்சாரம் தொடர்பான இந்த விவாதத்தின் பொழுது, மிக முக்கியமாக நாட்டிலே இயற்கையின் வழியிலே நீங்கள் மின்சாரங்களைப் பெறுவதும், ஏற்கனவே இருக்கின்ற நீர் மின்சாரத்தின் ஊடாகவும் நாட்டினுடைய மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தாலும் இப்பொழுதும் கூட சில இடங்களில் இயந்திரங்கள் மூலமாக மின்சாரம் வழங்குகின்ற செயல் திட்டங்கள் நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, இயற்கை ரீதியாகக் கிடைக்கின்ற மின்சாரத்தினுடைய தாக்கமும் தரவுகளும் குறைவு என்பதையும் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்த சிறீதரன் எம்.பி!

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில், ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்கான பயணத்தில் கடந்த காலங்களிலும் தற்போதைய காலகட்டத்திலும் ஆற்றப்பட்டு வரும் முக்கியமான பங்களிப்புகளுக்காக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய முன்னேற்றப் பயணத்தில் தமிழ்நாடு அரசும் […]
தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை சந்தித்த சிறீதரன் எம்.பி!

”தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும், நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும், ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலையோடு இரண்டறக் கலந்தவருமான மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை, அவருடைய அமைச்சு அலுவலகத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, சமூக நீதித்துறை அமைச்சராகத் தனது பணிகளைச் சிறப்பாக ஆற்றிவரும் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, சந்திப்பின் நினைவாகப் புத்தகம் ஒன்றையும் வழங்கிவைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் […]
கரைச்சிப் பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் புதிய ஆயுர்வேத மருந்தகம் திறப்பு!

“ஈழத் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் என்பது வெறும் நோய் தீர்க்கும் கலை மட்டுமல்ல; அது எமது மண்ணோடும், மரபோடும், இயற்கை வளங்களோடும் பிணைக்கப்பட்ட எமது தனித்துவ அடையாளத்தின் பிரிக்க முடியாத ஒரு குறியீடாகும்” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார். ”மருத்துவத்துறையில் நாம் அடையும் இத்தகைய சுயாட்சியானது, எமது ஒட்டுமொத்த அரசியல் விடுதலைக்கான பயணத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக அமையும். அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் […]
வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படையுங்கள்: சிறீதரன் எம்.பி அறைகூவல்! (VIDEO)

“நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக முன்னின்று உழைப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இத்தகைய வரலாற்றுப் பணியைச் செய்ய எல்லோரும் தயாரா? ” என போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சிறீதரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். ஆளுமையுள்ள போராளிகளை வெறுமனவே அரசியலுக்குப் பயன்படுத்துவதோ அல்லது வாக்குக் கேட்பதற்கான கருவிகளாக மாற்றுவதோ […]
மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும் என சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு…!

“மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை அறுத்து, நாம் அதிமானுடர்களாக நிமிர வேண்டும்” என மாணவர் சமுதாயத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ஜெர்மனியின் புகழ்பெற்ற தத்துவஞானி பிரீட்ரிக் நீட்ஷே (Friedrich Nietzsche) அவர்களின் புகழ்பெற்ற ‘அப்படியும் பேசினார் ஜரதுஸ்ட்ரா’ (Thus Spoke Zarathustra) என்னும் நூலில்“மனிதன் என்பவன் ஒரு நிலையான உயிரினம் அல்ல. […]
மயிலிட்டி மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் இன்றைய தினம் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர். கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னமும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள், மாண்புமிகு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இரு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி, […]
35 ஆண்டுகால நில ஆக்கிரமிப்பும் மீனவர்களின் அவலமும்: நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ் மக்களின் குரல்! (VIDEO)

மிக முக்கியமாக கடந்த மே மாசம் 27ஆம் தேதி புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தார்கள். அந்த மீனவர்களிலே நான்கு பேர் இதுவரை இன்னும் வீடு திரும்பவில்லை. அரசாங்கத்தினால் அவ்வாறு சென்றவர்களை கொண்டு வருவதற்கான, தேடி கண்டுபிடிப்பதற்கான சரியான நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே அந்த பகுதி எங்களுடைய மீனவ சகோதரர்கள் எங்களிடம் முறையிட்டுருக்கிறார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் […]
இலங்கை மற்றும் மாலதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரை சந்தித்து, நன்றி தெரிவித்த சிறீதரன் எம்.பி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், இலங்கை மற்றும் மாலதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரான டாக்டர் சிரி வோல்ட் (Dr. Siri Walt) அவர்களை சந்தித்து, அவரது பணிக்கால சேவைகளுக்காக நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக முன்னேற்றம் தொடர்பாக தூதுவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக சிறீதரன் எம்.பி. தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்ததோடு, நினைவுச் […]
சங்கீத்சனின் விடுதலை விவகாரம்: ஜனாதிபதி அநுர – சிறிதரன் எம்.பி இடையே தொலைபேசி உரையாடல்!

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையொன்று நடைபெற்றுள்ளது. குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீத்சனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக்கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறிதரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, அமைச்சர் சந்திரசேகரருக்கும், சிறிதரன் […]
“வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் வெடிக்கும்!” நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய தினம் அவசர கால சட்டத்தோடு சேர்ந்த வகையில் நீடிப்பு செய்வதற்கான பிரேரணையை ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த சூழலில், இந்த நாட்டிலே பல்வேறுபட்ட துயர நிகழ்வுகளும் துன்பங்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த காலச்சூழல் மிகவும் பயங்கரமானதாக இந்த நாட்டிலே இருக்கின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் […]
யாழ் சிறையில் உள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

எழுச்சிப் பாடல் பாடி, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் எழுச்சிப் பாடல்களைப் பாடிப் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ், கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண […]