அன்னை பூபதி அவர்களின் பத்தாம் நாள் நினைவேந்தல்!

ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்காகவும், நீதிக்காகவும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் பத்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த அஞ்சலி நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைகளின் கௌரவ உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மூடப்பட்ட புகையிரதக் கடவைகளைத் திறக்க நடவடிக்கை!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று( 27) யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகளையும் சபைக்கு வழங்கியிருந்தார். குறிப்பாக, “யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரவுண் வீதி முதலாம் ஒழுங்கை – அன்னசத்திர முதலாம் ஒழுங்கைப் பகுதியில் மூடப்பட்டுள்ள […]
எமது மண் தியாகங்களாலும் கண்ணீராலும் கட்டமைக்கப்பட்டது – சாதனையாளனுக்கான மதிப்பளிப்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு!

”SRI LANKA’S GOT TALENT” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அசாத்திய நடனத் திறனை வெளிப்படுத்திய செல்வன் சுதாஸ் ரஜீவன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ”யுத்தத்தின் வலியின் உச்சியிலிருந்து சாதனையின் உச்சம் வரை சென்ற எங்கள் சாதனையாளன்” என்ற பொருண்மையில், இராமநாதபுரம் மத்தி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். சாதனையாளன் […]
Meeting with UN Resident Coordinator: MP Shritharan discusses governance gap in the North

ITAK Member of Parliament Sivagnanam Shritharan met with the United Nations Resident Coordinator, Marc-André Franche, on Tuesday (24/03/2026) at the UN office (IOM) in Jaffna. During the meeting, extensive discussions were held on the current political and socio-economic situation in the Northern Province. The UN Resident Coordinator was briefed on the significant governance gap caused […]
யாழ்ப்பாணத்தில் 300 ஆண்டுகால வீதி திடீர் மூடல்: களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த புகையிரதக் கடவை வீதி ஒன்று திடீரென மூடப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ். நகரின் பிரவுண் வீதி இரண்டாம் ஒழுங்கையையும் அன்னசத்திர வீதியையும் இணைக்கும் இந்தப் போக்குவரத்துப் பாதையே கடந்த 16-ஆம் திகதி முதல் புகையிரதத் திணைக்களத்தினால் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளாகத் தாங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் […]
ஆரோக்கியமான சமுதாயமே அறிவுபூர்வமான போராட்டங்களை முன்னெடுக்கும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின், மாணவர்களுக்கான போசாக்கு வழங்கும் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். தையற்கலைப் பயிலரங்கினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வினைத் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்: ”இன்றைய இந்தச் சத்துணவு வழங்கும் நிகழ்வு என்பது வெறும் பசியாற்றும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல; இது ஒரு இனத்தின் இருப்பைத் தீர்மானிக்கின்ற மிக […]
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் சிறீதரன் எம்.பி…!

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் நடாத்திய அமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ”ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் இளைய சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகம் […]
அன்னை பூபதி அவர்களின் மூன்றாம் நாள் நினைவேந்தல்!

ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்காகவும், நீதிக்காகவும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. “தன்னலமற்ற ஒரு தாயின் தியாகம் வீண் போகாது” என்பதை உலகுக்கு உணர்த்திய அவரது தியாகப்பயணம் என்றும் எம் தலைமுறைகளால் போற்றப்படும்.
”சுயநல அரசியலைக் கடந்து ஒருமித்த இலக்கை நோக்கி ஒன்றிணைவோம்”: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

தமிழர்களிடையே நிலவும் “நான் – நீ” என்ற போட்டி மனப்பான்மை கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவான அரசியல் இலக்கோடும், ஒற்றுமையோடும் இருந்திருந்தால் தமிழ் மக்கள் இன்று மேம்பட்ட நிலையில் இருந்திருக்க முடியும் என,” அண்மையில் நடைபெற்ற கைதடி, நவபுரம், நவசன சமூக நிலையத்தின் அறுபத்தி ஓராம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இவ்வாறு தெரிவித்தார். ஆயுதப் போராட்டத்தின் […]
“உள்ளம் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல” – செவிப்புலன் வலுவற்றோர் விழாவில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (ROOD) 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக்கூட்டமும் அண்மையில் (2026/03/07) யாழ்ப்பாணம், கலட்டியில் அமைந்துள்ள அமையத்தின் தலைமைக் காரியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், “உலகம் சத்தங்களால் நிறைந்தது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், மௌனத்திற்கு ஒரு வலிமையான மொழி […]
“திட்டமிட்ட அழிப்புகளிலிருந்து எம் இனத்தைக் காக்க மாணவர்கள் ஒழுக்கத்துடன் உயர வேண்டும்” சிறீதரன் எம்.பி

”எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது; உலகத்தரம் வாய்ந்த கல்வியோடும் கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே, திட்டமிடப்பட்ட அழிப்புக்களை முறியடித்து நாம் உலக அரங்கில் தலைநிமிர முடியும்” என அண்மையில், யாழ்/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் கலந்துகொண்ட, நிகழ்வின் பிரதம விருந்தினரும் அப் பள்ளியின் பழைய மாணவனுமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். போருக்குப் பின்னரான சூழலில் தமிழ் தேசிய இனம் பல்வேறு நூதனமான மற்றும் திட்டமிடப்பட்ட அழிப்பு […]
பெரியபரந்தன் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – பெரியபரந்தன் வட்டாரக் கிளையினரின் ஒழுங்கமைப்பில் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது