இலங்கை மற்றும் மாலதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரை சந்தித்து, நன்றி தெரிவித்த சிறீதரன் எம்.பி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், இலங்கை மற்றும் மாலதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரான டாக்டர் சிரி வோல்ட் (Dr. Siri Walt) அவர்களை சந்தித்து, அவரது பணிக்கால சேவைகளுக்காக நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக முன்னேற்றம் தொடர்பாக தூதுவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக சிறீதரன் எம்.பி. தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்ததோடு, நினைவுச் […]
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு நிதியுதவி!

சுவிஸ்சர்லாந்து வாழ் வர்த்தகரின் நிதிப் பங்களிப்பில், பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அடிகளார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு, யாழ். ஊர்காவற்றுறை புனித அந்தோணியார் கல்லூரியிலிருந்து 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை மூலம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான 13 மாணவர்களுக்கான நிதி அன்பளிப்பை வழங்கினார். இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், “யுத்தத்தினால் […]
சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு!

இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரன் எம்.பியின் இல்லத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையிலிருந்து சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பில் சுவிஸ் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பிலும், இந்த ஆண்டு தமிழ்த்தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.