மாலதி நினைவுநாள் கிளிநொச்சியில்…!

ஈழ விடுதலைப் போரின் முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தர்மபுரம் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நினைவுரையாற்றியதோடு, கண்டாவளைப் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட, பொருண்மியம் நலிந்த குடும்பங்களைச்சேர்ந்த இருநூறு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தார். நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச […]

எம் மனங்களில் நிறைந்த சச்சி சேருக்கு புகழ் வணக்கம்..!

நெடுநாளைய நோயின் பிடியில் உருகிக் கரைந்த சச்சி சேரின் உயிர் பிரிந்த செய்தி, எமக்குத் தந்திருக்கும் துயரின் வலிமை தாங்கொணாதது. தாயக விடுதலைப் போராட்டத்தின் தார்மீகப் பங்காளனான அவரின் பணி, பின்வந்த நாட்களில் ஆசிரியத்துவத்தின் தளத்தில் ஆழப்பதியத் தொடங்கியது. அவரிடத்தே நிறைந்திருந்த ஆங்கில மொழிப்புலமையும், தகைமையும் அவரை ஓர் ஆங்கில ஆசானாக அடையாளம்பெறச் செய்திருந்தாலும், பல்துறை ஆற்றலின் பரிமாணங்கள் அவருள்ளிருந்ததை அவரை அறிந்தோர் நன்கறிவர். நேர்த்தியான உரையாடற் பாங்கு, அங்கதச் சுவை பொங்க பேசும் பாணி, அரசியல் […]

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில்..!

ஈழத் தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கான ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பன்னிரு தினங்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் லெப்.கேணல்.திலீபன் அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்றையதினம் (26) கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் குணபாலசிங்கம் குணராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் […]

கிளிநொச்சியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்.!!

கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாணசபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர். கட்சியின் செயல்நிலை […]

தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் எம்.பி அழைப்பு.!

பொது எதிரியை எதிர்கொள்வதற்காக எமக்குள் உள்ள எதிர்ப்புணர்வுகளை புறம்தள்ளி, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தாது இன நலன்களை முன்னிறுத்தும் ஓர் கூட்டுத் தலைமையின் உருவாக்கம் குறித்து சிந்திப்பதோடு, தமிழ்த்தேசியத் தளத்தில் இயங்கும் ஒவ்வொரு கட்சிகளினதும் மரபார்ந்த தனித்துவங்களைப் பேணியவாறு, தேர்தல் கூட்டாக அன்றி தேசத்தின் கூட்டாக, கூட்டமைப்பை மீள உருவாக்குவதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்;துழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது […]

கிளிநொச்சியில் வணக்க நிகழ்வு.

மாண்புமிகு சம்பந்தன் ஐயா அவர்களுக்கு இன்று கிளிநொச்சியில் வணக்க நிகழ்வு இடம்பெற்றது.. இன்று காலை 9 மணிக்கு டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள விசேட பந்தலில் அவருடைய திருவுருவப் படம் வைக்கப்பட்டு மலர்மாலை அணிவித்து குறித்த அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது . தொடர்ந்து மாண்புமிகு சம்பந்தன் ஐயா அவர்களது இறுதி நிகழ்வு கருமங்கள் நடைபெறும் வரையும் குறித்த பந்தலில் சோக இசை ஒலிபரப்பப்பட்டு தினமும் மக்கள் அஞ்சலி செலுத்தக்கூடிய வகையில் விசேட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவருக்கு அஞ்சலி!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் புகழுடலுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றையதினம் அஞ்சலி செலுத்தினார்!

கடைசியாக ஸ்ரீதரனிடம் எடுத்துரைத்த சம்மந்தர் ஐயா!

தமிழ்மக்களுக்காக முழுமையாக அர்பணியுங்கள் என தமிழரசுக் கட்சிக்கு போட்டி மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் இறுதியாக எடுத்துரைத்தார் பெருந்தலைவர் சம்மந்தன் ஐயா.. இன்று அவர் விட்டு சென்ற தமிழ் தேச மக்களுக்கான பணியினை அவர் மீதும் கட்சி மீதும் நம்பிக்கை கொண்ட உள்ளங்கள் யாவரும் அவருடைய எண்ணங்கள், சிந்தனைகளை ஏற்று செயற்படுவதே பெருந்தலைவருக்கு செய்யும் மரியாதையாகும்..

கெளரவ. இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்வுகள்.

நேற்றைய தினம் மறைந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான, கெளரவ. இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றதுடன், துயரின் வெளிப்பாடாக மாவட்டப் பணிமனை முன்றலில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

சம்பந்தன் ஐயாவின் சிறு வரலாறு.

சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[5] 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.  இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு சூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் […]