முன்னாள் கர்நாடக துணை முதல்வரை சந்தித்த சிறீதரன் எம்.பி!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் கே. எஸ். ஈஸ்வரப்பா அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அவரது பிரத்தியேக இல்லத்தில் நேரில் (2026/07/04) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் தீர்வை எட்ட வேண்டுமாயின், இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் காத்திரமான பங்களிப்பும் அழுத்தங்களும் தற்போதைய சூழலில் மிக அவசியமானவை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இங்கு வலியுறுத்தினார். மேலும், இந்திய […]
ஈழத் தமிழர்களுடனான உறவுகளை வலுப்படுத்த ஓர் இணக்கமான சந்திப்பு!

கல்கிஸை இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் எழுப்பப்பட்ட அதிருப்திக் குரல்களையடுத்து, அந்த தொடருந்து சேவையை வாரத்தில் ஆறு நாட்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாரத்தில் புதன்கிழமை மாத்திரம் வடக்கு நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையில் இருக்காது என தொடருந்து திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்திருக்கும் தொடருந்து இயந்திரம் ஒன்றை விரைந்து திருத்துவதன் மூலம் வரும் 20ஆம் திகதிக்குப் […]
ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்கு சர்வதேச ஆதரவு தொடரும்: செவாலியர் ஆர். அருணாசலம் உறுதி!

ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போராட்ட வாழ்வியலில் மிகுந்த கரிசனை கொண்டவரும், சமூகப் பணிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் முனைப்புடன் செயற்பட்டு வருபவரும், IMPA நிறுவனத் தலைவரும், உலகளாவிய சமூக சேவைக்காக செவாலியர் விருது பெற்றவருமான கௌரவ கலாநிதி ஆர். அருணாசலம் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் மருத்துவர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர் கர்நாடக மாநிலம், பெங்களூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இக்கலந்துரையாடலில், […]
ஈழத்தமிழர் அரசியல் தீர்வு மற்றும் நீதி குறித்து காத்திரமான சந்திப்பு!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் R. Gundu Rao அவர்களின் புதல்வனும், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினருமான Mr. Dinesh Gundu Rao அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு இன்னும் எட்டப்படாத சூழலில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் […]
ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது! (VIDEO)

புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் மற்றும் கர்நாடக மாநில தாய்மொழிக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர் முனைவர் எஸ். டி. குமார் தலைமையில் நேற்று முந்தினம் தினம் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் வைத்தியர் […]
ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க சிறீதரன் எம்.பி. இந்தியா பயணம்!

பெங்களூருவில் நடைபெறவுள்ள ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இந்தியா பயணமாகியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் ஜூலை 5-ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள 7-வது உலகத் திருக்குறள் மாநாட்டில், இலங்கைத் தமிழரசுச் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றவுள்ளார். பெங்களூரு லால்பாக் சாலையில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் (St. Joseph’s University) இந்த மாநாடு […]
தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை சந்தித்த சிறீதரன் எம்.பி!

”தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும், நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும், ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலையோடு இரண்டறக் கலந்தவருமான மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை, அவருடைய அமைச்சு அலுவலகத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, சமூக நீதித்துறை அமைச்சராகத் தனது பணிகளைச் சிறப்பாக ஆற்றிவரும் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, சந்திப்பின் நினைவாகப் புத்தகம் ஒன்றையும் வழங்கிவைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் […]
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த சிறீதரன் எம்.பி!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை நேற்றைய தினம் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போது, தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் செம்மணி மனிதப் […]