March 21, 2026

அன்னை பூபதி அவர்களின் மூன்றாம் நாள் நினைவேந்தல்!

ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்காகவும், நீதிக்காகவும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

“தன்னலமற்ற ஒரு தாயின் தியாகம் வீண் போகாது” என்பதை உலகுக்கு உணர்த்திய அவரது தியாகப்பயணம் என்றும் எம் தலைமுறைகளால் போற்றப்படும்.