உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய தேசிய சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் மகிழ்வூட்டும் விளையாட்டுப் போட்டிகளும் அண்மையில் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, கபடிப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்த கிளி/சிவநகர் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கான மதிப்பளிப்பையும் கௌரவிப்பையும் வழங்கினார்.

தொடர்ந்து, மகிழ்வூட்டும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. தில்லைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Post Views: 6