அனர்த்த நிலை தொடர்பில் யாழ்.அரச அதிபருடன் சந்திப்பு..!!

யாழ்ப்பாண மாவட்டத்தின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம் (30) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் […]
வடக்கின் வெள்ள அனர்த்தம் : இடர்கால நிலை தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு..!!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம் (29) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் கட்சிகளை தமிழர்கள் நிராகரித்து விட்டார்களா?

மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்..!

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் அவர்களை ஆதரித்து, நேற்றைய தினம் (06) வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,இதுவரை காலமும் தமிழ் […]
தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.!

நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அவர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர்.ப.சத்தியலிங்கம் அவர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து, உத்தியோகபூர்வமாக அதனை வெளியீடு செய்து வைத்தார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சித் தலைவரது இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ம.ஆ.சுமந்திரன் மற்றும் வேட்பாளர் இம்மனுவல் ஆனல்ட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்
வேட்புமனுத்தாக்கலின் பின், தந்தை செல்வா நினைவிடத்தில்

வேட்புமனுத்தாக்கலின் பின், தந்தை செல்வா நினைவிடத்தில்
தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் எம்.பி அழைப்பு.!

பொது எதிரியை எதிர்கொள்வதற்காக எமக்குள் உள்ள எதிர்ப்புணர்வுகளை புறம்தள்ளி, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தாது இன நலன்களை முன்னிறுத்தும் ஓர் கூட்டுத் தலைமையின் உருவாக்கம் குறித்து சிந்திப்பதோடு, தமிழ்த்தேசியத் தளத்தில் இயங்கும் ஒவ்வொரு கட்சிகளினதும் மரபார்ந்த தனித்துவங்களைப் பேணியவாறு, தேர்தல் கூட்டாக அன்றி தேசத்தின் கூட்டாக, கூட்டமைப்பை மீள உருவாக்குவதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்;துழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது […]
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவருக்கு அஞ்சலி!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் புகழுடலுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றையதினம் அஞ்சலி செலுத்தினார்!
கடைசியாக ஸ்ரீதரனிடம் எடுத்துரைத்த சம்மந்தர் ஐயா!

தமிழ்மக்களுக்காக முழுமையாக அர்பணியுங்கள் என தமிழரசுக் கட்சிக்கு போட்டி மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் இறுதியாக எடுத்துரைத்தார் பெருந்தலைவர் சம்மந்தன் ஐயா.. இன்று அவர் விட்டு சென்ற தமிழ் தேச மக்களுக்கான பணியினை அவர் மீதும் கட்சி மீதும் நம்பிக்கை கொண்ட உள்ளங்கள் யாவரும் அவருடைய எண்ணங்கள், சிந்தனைகளை ஏற்று செயற்படுவதே பெருந்தலைவருக்கு செய்யும் மரியாதையாகும்..
கெளரவ. இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்வுகள்.

நேற்றைய தினம் மறைந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான, கெளரவ. இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றதுடன், துயரின் வெளிப்பாடாக மாவட்டப் பணிமனை முன்றலில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
விளிம்புநிலை அரச உத்தியோகத்தர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்..

முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டம் தொடர்பில் கடந்த 21ஆம் திகதிய பாராளுமன்ற அமர்வில் நடைபெற்ற விவாதம் சார்ந்து உரையாற்றிய போதே அவர் மேற்படி கோரிக்கையைப் பதிவுசெய்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் யாழ்.திருநெல்வேலி அரசினர் விவசாயப் பாடசாலை, வட்டக்கச்சி அரசினர் விவசாயப் பாடசாலை, கண்டி குண்டகசாலை அரசினர் விவசாயப் பாடசாலைகளில் கல்விகற்றவர்களையும், அக்காலத்தில் 8ம் வகுப்பு சித்தியடைந்தவர்களையும்,1930 களிலும், அதன் பின்னர் 1950களிலும் விவசாயத்தை மையப்படுத்தி குடியேற்றியதன் மூலம் உருவாக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில், […]
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான சந்திப்பானது இன்றைய தினம் இடம்பெற்றது இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் பங்குபற்றி இருந்தார்கள். இக்கலந்துரையாடலில் குறிப்பாக எமது வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு சமகால அரசியல் நிலவரம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலதிக தகவல் தமிழ் எம்பிக்களை சந்தித்த ஜெய்சங்கர்! வெளியானது கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்