ஈழத் தமிழர்களுடனான உறவுகளை வலுப்படுத்த ஓர் இணக்கமான சந்திப்பு!

கல்கிஸை இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் எழுப்பப்பட்ட அதிருப்திக் குரல்களையடுத்து, அந்த தொடருந்து சேவையை வாரத்தில் ஆறு நாட்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாரத்தில் புதன்கிழமை மாத்திரம் வடக்கு நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையில் இருக்காது என தொடருந்து திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்திருக்கும் தொடருந்து இயந்திரம் ஒன்றை விரைந்து திருத்துவதன் மூலம் வரும் 20ஆம் திகதிக்குப் […]

ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்கு சர்வதேச ஆதரவு தொடரும்: செவாலியர் ஆர். அருணாசலம் உறுதி!

​ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போராட்ட வாழ்வியலில் மிகுந்த கரிசனை கொண்டவரும், சமூகப் பணிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் முனைப்புடன் செயற்பட்டு வருபவரும், IMPA நிறுவனத் தலைவரும், உலகளாவிய சமூக சேவைக்காக செவாலியர் விருது பெற்றவருமான கௌரவ கலாநிதி ஆர். அருணாசலம் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் மருத்துவர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர் கர்நாடக மாநிலம், பெங்களூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். ​சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இக்கலந்துரையாடலில், […]

“நம்பிச் செல்லும் சிறுமிகளுக்கு நேரும் கொடூரம்! மதத்தலைவர்களின் அநாகரிகச் செயல்கள் குறித்து சிறீதரன் எம்.பி காட்டம்!” (VIDEO)

இன்றைய தினம் வழக்கறிஞர் திருமதி கிருணி விஜயசிங்க அவர்களால் கொண்டுவரப்பட்ட பாடசாலை மாணவர்களின், கல்வி அபிவிருத்தி, தொழில் அபிவிருத்தி மற்றும் தனிநபர் சமூக அபிவிருத்தியின் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் (Student Counselor) ஒருவரை நியமித்தல் என்கிற இந்த பிரேரணை ஒரு காலத்தினுடைய தேவையாக நான் கருதுகிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை […]

“தமிழீழ வைப்பக நகைகள் மற்றும் புனர்வாழ்வு கழக நிதியை தமிழ் மக்களிடம் ஒப்படையுங்கள்!” – நாடாளுமன்றத்தில் சி.சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய நாள், பணத்தூயதாக்கல் சட்டமூலத்தினுடைய நிறைவேற்றத்தை நீங்கள் கொண்டு வர முயற்சிக்கின்ற இந்த நாளிலே, இந்த நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய யுத்தத்தின் பொழுது தமிழீழ தேசம் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நிதி, பொருளாதார, அரசியல் மையப்படுத்தப்பட்ட ஒரு தேசமாக தமிழர்களுடைய நிலப்பகுதிகள் இருந்தது. அந்த காலகட்டங்களில் அவர்களுடைய நிலப்பகுதிகளில் இயங்கிய தமிழீழ வைப்பகத்திலே தமிழர்கள் தங்களுடைய நகைகளை அடகு வைத்திருந்தார்கள். இறுதி யுத்தத்தின் பொழுதும் அந்த நகைகள் அடகிலே இருந்த நகைகளை எடுக்கக்கூடியவர்கள் மீள எடுத்திருந்தார்கள். எடுக்காதவர்களுடைய […]

ஈழத்தமிழர் அரசியல் தீர்வு மற்றும் நீதி குறித்து காத்திரமான சந்திப்பு!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் R. Gundu Rao அவர்களின் புதல்வனும், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினருமான Mr. Dinesh Gundu Rao அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினர். ​இதன்போது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு இன்னும் எட்டப்படாத சூழலில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் […]

ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது! (VIDEO)

புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் மற்றும் கர்நாடக மாநில தாய்மொழிக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர் முனைவர் எஸ். டி. குமார் தலைமையில் நேற்று முந்தினம் தினம் நடைபெற்றது. ​இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் வைத்தியர் […]

ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க சிறீதரன் எம்.பி. இந்தியா பயணம்!

பெங்களூருவில் நடைபெறவுள்ள ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இந்தியா பயணமாகியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் ஜூலை 5-ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள 7-வது உலகத் திருக்குறள் மாநாட்டில், இலங்கைத் தமிழரசுச் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றவுள்ளார். பெங்களூரு லால்பாக் சாலையில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் (St. Joseph’s University) இந்த மாநாடு […]

தம்பகாமத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட இறுதிப்போட்டி: சிறீதரன் எம்.பி பங்கேற்பு!

தம்பகாமம் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றுமுன்தினம்(29) மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுப்பிரமனியம் சுரேன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திரு. எஸ். சுஜிதரன், கிராம அலுவலர் எஸ். விஜிதா, […]

“தென்னந்தோப்புகளை அழித்து காற்றாலைகளா?” நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய தினம் வலுசக்தி மற்றும் மின்சாரம் தொடர்பான இந்த விவாதத்தின் பொழுது, மிக முக்கியமாக நாட்டிலே இயற்கையின் வழியிலே நீங்கள் மின்சாரங்களைப் பெறுவதும், ஏற்கனவே இருக்கின்ற நீர் மின்சாரத்தின் ஊடாகவும் நாட்டினுடைய மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தாலும் இப்பொழுதும் கூட சில இடங்களில் இயந்திரங்கள் மூலமாக மின்சாரம் வழங்குகின்ற செயல் திட்டங்கள் நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, இயற்கை ரீதியாகக் கிடைக்கின்ற மின்சாரத்தினுடைய தாக்கமும் தரவுகளும் குறைவு என்பதையும் […]

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்த சிறீதரன் எம்.பி!

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில், ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்கான பயணத்தில் கடந்த காலங்களிலும் தற்போதைய காலகட்டத்திலும் ஆற்றப்பட்டு வரும் முக்கியமான பங்களிப்புகளுக்காக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய முன்னேற்றப் பயணத்தில் தமிழ்நாடு அரசும் […]

தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை சந்தித்த சிறீதரன் எம்.பி!

​”தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும், நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும், ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலையோடு இரண்டறக் கலந்தவருமான மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை, அவருடைய அமைச்சு அலுவலகத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். ​இச்சந்திப்பின்போது, சமூக நீதித்துறை அமைச்சராகத் தனது பணிகளைச் சிறப்பாக ஆற்றிவரும் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, சந்திப்பின் நினைவாகப் புத்தகம் ஒன்றையும் வழங்கிவைத்தார். ​விடுதலைச் சிறுத்தைகள் […]

கரைச்சிப் பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் புதிய ஆயுர்வேத மருந்தகம் திறப்பு!

“ஈழத் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் என்பது வெறும் நோய் தீர்க்கும் கலை மட்டுமல்ல; அது எமது மண்ணோடும், மரபோடும், இயற்கை வளங்களோடும் பிணைக்கப்பட்ட எமது தனித்துவ அடையாளத்தின் பிரிக்க முடியாத ஒரு குறியீடாகும்” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார். ​”மருத்துவத்துறையில் நாம் அடையும் இத்தகைய சுயாட்சியானது, எமது ஒட்டுமொத்த அரசியல் விடுதலைக்கான பயணத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக அமையும். அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் […]