Posted on 05 May 2012
இன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அது தமிழர்களைப் பொறுத்தவரை சாதகமானதொன்றாக அமையாவிடினும், அதில் கூறப்பட்டிருக்கின்ற தமிழர் பகுதியின் நில ஆக்கிரமிப்பு, இராணுவ வெளியேற்றம், மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.
Posted on 04 May 2012
கிளிநொச்சி மண் ஒரு மகத்தான மண் இந்த மண்தான் உலகம் வியந்த வீரத்தையும், அதன் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் கண்டிருந்த மண், இங்கிருந்தே தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும்.இங்கிருந்தே பிரகடனங்கள் வெளியிடப்படவேண்டும். இதுதான் தமிழர்களின் இருதய பூமி.
Posted on 01 May 2012
இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு நாங்களும் வரிப்பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அந்த வரிப்பணத்தின் மூலம் எமது பிரதேசத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் எந்தவிதமான உதவிகளும் செய்யப்படுவதில்லை, இன்னமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
Posted on 01 May 2012
அவுஸ்திரேலியாவின் இலங்கைத் தூத ரகத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர் நற்றலியா நேற்று யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
Posted on 01 May 2012
மீளக்குடியமர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியா உதவிகளை வழங்குகிறது. ஆனால் அதைவிட முக்கியமான அரசியல் தீர்வு ஒன்றை விரைவில் காண இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதே அவசரமும் அவசியமுமான தேவையாகும்.
Posted on 01 May 2012
தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கூறினார். இலங்கை வரும் இந்திய எம்.பி.க்கள் குழு, சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலைத் தவிர்த்து சுதந்திரமாக தமிழர் பகுதிகளைப் பார்வையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Posted on 01 May 2012
யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ள மீனவர்களை தொழில் செய்யவேண்டாம் என வடமராட்சி முனை கடற்றொழிலாளர்கள் கூறியதான வெளியான செய்தியில் உண்மை கிடையாது என பிரதேச மீனவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் விளக்கமளித்துள்ளனர்.
Posted on 01 May 2012
இராணுவ சீருடையுடன் சென்று அங்கு புத்தர் சிலை இருப்பதாகவும், தராவிடில் கோவிலை இடித்து தரைமட்டமாக்கப் போவதாகவும் இலங்கை இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து. அதிர்ச்சியடைந்த அக் கிராமக்கள் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து பா.உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் அங்கு சென்று நிலைமையை பார்வையிட்டுள்ளதுடன் அப் பிரதேசமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.
Posted on 01 May 2012
வரலாற்றில் முதற்தடவையாக தந்தை செல்வாவின் ஜனன தினவு தின நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை அலுவலகம் அறிவித்துள்ளது.இந்நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி, கரச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
Posted on 01 May 2012
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைகாட்டைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை இறுதி வருட மாணவனான றெனோல்ட் எல்ரன் நேற்று கடலில் மூழ்கி சாவடைந்தார். இன்று கட்டைக்காட்டில் நடைபெற்றுள்ள எல்ரனின் இறுதி நிகழ்வில் சி.சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
Posted on 01 May 2012
வலிகாமம் வடக்கு வசாவிளான் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையிலும் சுமார் 90வீதமான நிலப்பகுதி தொடர்ந்தும் படையினரிடமே இருப்பதாக தெரிவித்துள்ள மக்கள், இது குறித்து எந்த தகவலும் வெளியே தெரியாமல் பாதுகாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
Posted on 01 May 2012
2009ம் ஆண்டின் பின்னர் ஜ.நா மனிதவுரிமைகள் அமையம் தற்போது 12ஆவது தடவை அமர்வினைக் கூட்டியிருக்கின்றது. இதற்கு முன்னரும் 11தடவை கூட்டப்பட்டிருக்கின்றது. அப்போது கூட்டமைப்பிடம் யாரும் கேட்காத கேள்வி இப்போது; ஏன் கேட்கப்படுகின்றது? இதை புரிந்தும் புரியாததுபோல சிலர் கேட்கத் தூண்டுகிறார்கள்.
Posted on 01 May 2012
மாணவர்களின் கல்விக்கு அத்திவாரக்கற்களாய் அமைபவர்கள் ஆசிரியர்கள்” எனவே ஆசிரியர்களுக்குரிய நலனில் அக்கறைகொண்டவர்களாக அவர்கள் மீது மரியாதை மிகுந்தவர்களாக நமது சமுகம் இருக்கவேண்டும் என சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
Posted on 01 May 2012
இரு தேசங்களாக இருந்த இலங்கையை ஒன்றாக்கியது பிரிட்டன் தான். எனவே தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு பிரிட்டனுக்கு உண்டு. இன்னும் பல ஆணைக்குழுக்கள் தோற்றம் பெறக்கூடும். ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தர அரசியல் தீர்வும் கிட்டாது. இவ்வாறு பா.உ. சிறிதரன் தெரிவித்துள்ளார்.
Posted on 01 May 2012
புதிர் பொங்கல் நிகழ்வு தமிழர் தம் பண்பாட்டையும் அதைப் பேணிக் காக்கும் கடப்பாட்டையும் எம் எல்லோர்க்கும் உணர்த்துகிறது. இவ்வாறு அக்கராயன் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற புதிர்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

<< Previous 1 2 3 4 5 6 7 8 Next >>